Sri lanka news

Advertisement

  • Breaking News

    முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிப்பு


    புத்தளம் நகரில் இரு முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புத்தளம் மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்று முன்தினம் இரவு ஜீப் வண்டியில் வந்த இருவரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    புத்தளம் மூர் சந்தியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் க.பொ.த. (சாஃத) முடித்த மாணவர் ஒருவரும் இம்முறை க.பொ.த (சாஃத) எழுதவுள்ள மாணவருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

    இதில் ஒருவருக்கு பாரிய காயங்கள் என்பதால் பத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Fashion

    Beauty

    Culture