Sri lanka news

Advertisement

  • Breaking News

    உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரியில் வெளியாகும்

    2015ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பக்குமார புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

    பரீட்சை பெறுபேறுகளை  www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

    அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே தினத்தில் காலையில் பரீட்சைகள் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்படும்.

    இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் அவர்களில் 236,072 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் 72,997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.
    நாடுபூராவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் இந்த பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

    Fashion

    Beauty

    Culture