Sri lanka news

Advertisement

  • Breaking News

    முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கடைகளை மூட வேண்டுமென கொலை மிரட்டல்


    குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சதார் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இதேவேளை, அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் 1983ஆம் ஆண்டைப் போன்று வன்முறைகள் வெடிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Fashion

    Beauty

    Culture