Sri lanka news

Advertisement

  • Breaking News

    மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்த LTTE உறுப்பினருக்கு 10 வருட சிறைத்தண்டனை

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த போது பொலன்னறுவை மனம்பிட்டிய பகுதியில், குண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த LTTE உறுப்பினருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை முயற்சி தொடர்பான தகவல்கள் 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே பதிவாகியிருந்தன.

    இந்த சம்பவம் தொடர்பில் சிறையிடப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராஜா ஜெனீவன் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதன்போது, மேல் நீதிமன்ற நீதவான் ஆமேந்ர செனவிரத்ன, அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

    பிரதிவாதிக்கு 10ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

    Fashion

    Beauty

    Culture