Sri lanka news

Advertisement

  • Breaking News

    சங்கானையில் கொள்ளை

    வீட்டில் யாரும் இல்­லா­த­நேரம் பார்த்து ஜன்னல் கம்­பி­களைக் கழற்றி உட்­பு­குந்த திரு­டர்கள் 7 ஆயிரம் ரூபா பணத்­தையும் உண்­டி­யலில் சேக­ரித்து வைக்­கப்­பட்ட பணத்­தையும் திருடிச் சென்­றுள்­ளனர்.
    இந்தச் சம்­பவம் கடந்த புதன்­கி­ழமை பகல்­வேளை பொன்­னாலை சங்­கானை பிர­தான வீதி­யில்­அ­மைந்­துள்ள பால­கி­ருஷ்ணன் உத­ய­குமார் வீட்டில் இடம்­பெற்­றுள்­ளது.
    குறித்த திருட்டுச் சம்­பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
    இதே­வேளைஇ கடந்த வார­ம­ளவில் சங்­கானை பேருந்து நிலை­யத்­திற்­க­ரு­கா­மையில் அமைந்­துள்ள முச்­சக்­கர வண்­டி­க­ளுக்கு சீற் மற்றும் இதர வேலைகள் செய்து கொடுக்கும் கடை­யொன்றில் கடை உரி­மை­யாளர் வெளியே சென்ற சமயம் கடையின் உட்­ப­கு­தியில் வைக்­கப்­பட்­டி­ருந்த ரூபா 20 ஆயிரம் பணத்தை பகல் வேளை ஒருவர் திருடிச் சென்­றுள்ளார்.

    Fashion

    Beauty

    Culture