நேற்று முன்தினம் இரவு மொனராகலையிலிருந்து ஆபத்தான நோயாளி ஒருரை கண்டி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் எடுத்து வந்த அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் இரவு வேளை நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு பொலன்னறுவை வைத்தியசாலைக்கு விரைவாக திரும்பிச் செல்வதற்காக அம்பியூலன்ஸ் வண்டியை கண்டி வாவிக்கரை அருகில் பள்ளி வீதியில் தவறான திசையில் வேகமாக செலுத்திச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் அதனை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டபோது சாரதி மதுபோதையில் காணப்பட்டதுடன் அவரிடம் அம்புலன்ஸ் வண்டியை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரப் வாகன காப்புறுதி பத்திரம் என்பன இருக்கவில்லை.
அவரை கைது செய்த பொலிஸார் அவரது வாக்கு மூலங்களை பதிவு செய்துக் கொண்ட பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

Comments