Sri lanka news

Advertisement

  • Breaking News

    கையைப் பிடித்த நபரை மஹிந்த தாக்க முயற்சித்தமையினால் பெரும் பரபரப்பு

    அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் இட ம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது:- பொதுத்­தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் மஹிந்த ராஜபக் ஷ, அக்­கு­ரஸ்ஸ நக­ரத்­துக்கு செவ்­வாய்க்­கி­ழமை சென்றார். அங்கு பழைய பஸ்­த­ரிப்­பி­டத்­தி­லேயே பிர­சாரக் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் மாலை 4 மணி க்கு ஆரம்­ப­மா­னது. மஹிந்த ராஜபக் ஷ மாலை 5.30க்கு குறித்து இடத்துக்கு சென் றார். குண்­டுகள் துளைக்­காத பென்ஸ் காரில் சென்­றி­றங்­கிய அவர், குழு­மி­யி­ருந்த மக்­க­ளுக்கு இடை­யி­லேயே மேடையை நோக்கி சென்றார். அந்த கூட்­டத்தில் இருந்த ஒருவர், தனது ஆர்வ மேலீட்­டால், ராஜபக் ஷவின் கை யை பிடித்­துள்ளார். அச்­சந்­தர்ப்­பத்தில் ஏதோவொரு குழப்­பத்தில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ தன் கையை பிடித்­த­வரை நோக்கி தாக்க முயற்சித்துள்ளார். அவ்வாறு மஹிந்த, ராஜபக் ஷ தாக்க முயற்சித்த போதும் அவ­ருக்கு பாது­காப்பு வழங்­கி­க்கொண்­டி­ருந்த பாது­காப்பு தரப்­பைச்­சேர்ந்த மூவரும் தாக்­கு­தலை தடுத்துநிறுத்­து­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷவை பின்னால் ­தள்­ளி­விட்­டனர். அப்போது அவர் விழப் பார்த்தார். எனினும், மஹிந்­த­வுக்கு பின்னால் இருந்த பாது­காப்பு தரப்­பினர் மஹிந்­தவை பிடித்­து­விட்­டனர். அதன் பின்னர், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அக்­கு­ரஸ்ஸ வேட்­பாளர் மனோஜ் சிறி­சேன, மஹிந்த ராஜபக் ஷவை மேடைக்கு அழைத்­துச் ­சென்றார். அந்த தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷ சுமார் 25 நிமி­டங்கள் உரை­யாற்­றினார். எனினும், இந்த சம்­பவம் தொடர்பில் எது­வுமே கூறவில்லை. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்பிட்ட இடத்தை விட்டுச் செல் லும் போது, நப­ரொ­ருவர் இடை­யூறு செய்­த­தாக குறிப்பிட்டுள்ளார் குறித்த நபர் இரண்டு முறை மஹிந்­தவின் கையை பிடித்­த­மையே இந்­நி­லைமை தோன்­று­வ­தற்கு காரணம் என்றும் அவர் மது­போ­தையில் இருந்­துள்ளார் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: மாத்­தறை - அக்கு­ரஸ்ஸ பிர­தே­சத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனா­தி­ பதி மக்­க­ளி­டையே சென்றுகொண்­டி­ருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்­ப­வத்தைப் பயன்­ப­டுத்தி அர­சாங்கம் அர­சியல் இலாபம் தேட முற்­ப­டு­கிறது. இந்த சம்­பவம் தொடர்பில் தவ­றான விள க்கம் வழங்­கப்­ப­டு­வதால் அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூற­மு­டியும். பேர­ணியில் பாரிய கூட்டம் கலந்து கொண்­ட­து. மஹிந்த ராஜபக் ஷ வழ­மைபோல் மக் ­க­ளுக்கு இடையில் செல்லும் வேளை, எதி ரில் வரு­பவர் எவ்­வா­றான நபர் என சரி­யாக அடை­யாளம் காண்­பதில் பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு சிரமம் ஏற்படுவதுண்டு. சம்­ப­வத்தின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வாளர் ஒரு வர் மஹிந்­தவை நெருங்க முற்­பட்­ட­ார். முடி வில் அவ­ரது (மஹிந்த ராஜபக் ஷ) கையை இறுக்கிப் பிடித்திருந்தார். இதன்போது குறித்த நபர் போதையில் இருந்துள்ளார்.

    Fashion

    Beauty

    Culture