Sri lanka news

Advertisement

  • Breaking News

    மாணவர்களை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் வேண்டுகோள்.

    மாண­வர்­களை தங்­களின் தேர்தல் அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கும்,பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தா­தீர்கள் என கிளி­நொச்சி மாவட்ட கல்வி சமூகம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தற்­போது தேர்தல் காலம் என்­பதால் சிலர் மாண­வர்­களை தங்­களின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதனை உட­ன­டி­யாக விடுத்து மாண­வர்­களின் வழ­மை­யான கல்விச் செயற்­பாட்­டுக்கு வழி­வ­குக்­கு­மாறு மாவட்ட கல்விச் சமூ­கமும் பெற்­றோரும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். கடந்த கால தேர்தல்­க­ளிலும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாண­வர்கள் ஒரு அர­சியல் கட்­சியின் தேர்தல் பரப்­புரை செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. கிளி­நொச்­சியில் சில தனியார் கல்வி நிறு­வ­னங்­களின் நிர்­வா­கிகள் அர­சியல் வாதி­க­ளா­கவும் இருப்­ப­தனால் அவர்கள் தங்கள் கல்வி நிலை­யங்­களில் கல்வி கற்கும் க.பொ.த சாதா­ரண ­தரம், உயர்­தரம் மாண­வர்­களை .தேர்தல் காலங்­களில் முழு­மை­யாக கட்சி அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்தி வந்­துள்­ளனர். இதனால் பல மாண­வர்கள் பல பாதிப்­பு­க­ளுக்கும் முகம் கொடுக்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில் தற்­போதும் அவ்­வாறு மாண­வர்­களை தங்­களின் தேர்தல் கால அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடைப்­பெற்று வரு­கி­றது. கடந்த ஞாயிற்று கிழமை கிளி­நொச்சி கரைச்சி பிர­தேச சபை மண்­ட­பத்தில் கிளி­நொச்­சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலை­யத்தைச் சேர்ந்த மாண­வர்கள் வகுப்­புக்­கென அழைக்­கப்­பட்டு தங்­க­ளுக்கு தேர்தல் பரப்­புரை செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தல்கள் வழங்க்­க­பட்­டுள்­ளது. இது பெற்றோர்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பரீட்­சைகள் நெருங்கி வரும் வேளையில் இவ்­வாறு மாணர்­களை தங்­களின் அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்­து­வது கண்டிக்கதக்க விடயம் என்பதோடு அதனை கைவிட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு வழி ஏற்படுத்துங்கள் . கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகமும்,பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Fashion

    Beauty

    Culture