இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் சேியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றுள்ளது.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்ரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடனான கலந்துரையாடலின்போது ஆராயப்பட்ட விடயங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டுவருவதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.


Comments