Sri lanka news

Advertisement

  • Breaking News

    நுவரெலியாவில் இருந்து கண்டிக்கு பயணித்த லொறி மோதி கர்ப்பிணி பெண் ஒருவர் மரணம்

    நுவரெலியா, வெதமுல்லையில் லொறியில் மோதுண்டு பெண்ணொருவர் இன்று  மாலை உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
    இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொரி ஒன்று,  வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் வைத்து பாதையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
    விபத்தில்,  வெதமுல்லையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான வரதராஜ் வயது (36) சந்திரகலா என்பவரே உயிரழந்துள்ளார். 

    இந்நிலையில் தோட்ட மக்கள்  லொறியையும் லொறியின் சாரதியையும் அவ்விடத்திலிருந்து வெளியேற விடாது சூழ்ந்துகொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. பெண்ணின் சடலம் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

    Fashion

    Beauty

    Culture